;
Athirady Tamil News

காசா மருத்துவமனை சவக்கிடங்கில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பலருக்கு காசா மருத்துவமனையில் முதலுதவி அளித்து வந்த செவிலியர் ஒருவர், சவக்கிடங்கில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உடல்களில் தனது கணவரின் உடலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுத சம்பவம் கலங்க வைத்துள்ளது.

எதிர்பாராத அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அவர், மருத்துவமனைக்கு வெளியே நீண்ட தூரம் கதறியபடி ஓடினார்.

கல்லறைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் காஸாவில் நொறுங்கிய கட்டிடங்களில் உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் இடைவிடாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்களை அடக்கம் செய்ய கல்லறைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அத்துடன் உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுதபடி கல்லறைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்ற புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.