;
Athirady Tamil News

“நான் இறக்கும் வரை அரசியலில் இருந்து விலக மாட்டேன்” மகிந்த திட்டவட்டம்

0

நான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியின் முன்னோக்கி செல்லும் பாதையில் செல்ல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.

மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம்
நீண்ட காலமாக இலங்கை அரசியலில் முக்கிய பங்கை வகித்த மகிந்த ராஜபக்ஸ, அரசியல் களத்திற்கு பங்களிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்தை மகிந்த ராஜபக்ஸ வெளிப்படுத்தியிருந்தார்.

இருப்பினும், கடந்த வாரம், மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.