;
Athirady Tamil News

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்; மூவர் கைது

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் அக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்றைய தினம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அடுத்த வழக்கில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஏ ஏ.ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.