;
Athirady Tamil News

காசா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொடூர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

0

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான மோதல் நிலவிவருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதன் மூலம் காசா மீது இஸ்ரேல் பயங்கரமான தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.

மக்களை வெளியேற்றுவது கடினம்
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு செல்வது சாத்தியமற்றதாகவும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இப்பகுதியில் சுமார் 1.1 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், மேலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை குறுகிய காலத்தில் வெளியேற்றுவது கடினம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, முன்னராகவே இஸ்ரேல் காசா எல்லையில் பீரங்கிகள் மற்றும் 3 லட்சம் இராணுவ வீரர்களை குவித்து வைத்திருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.