;
Athirady Tamil News

யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.