;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது

0

யாழ்ப்பாணம் – மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை கடத்த முற்பட்ட சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் இன்று (13.10.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை
வட்டுகோட்டை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.