;
Athirady Tamil News

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.

அனுமதி
இஸ்ரேலில் வேலை தேடும் சாத்தியமுள்ள பணியாளர்கள் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்திடம் (PIBA) அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் பரிந்துரைகள் இன்றி அனுமதி வழங்க உள்ளூராட்சி அதிகாரிகள் சிலர் குறுக்கு வழியில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி 100க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை தற்போது பெற்றுள்ளதாகவும், அதில் 15 விசா அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.