;
Athirady Tamil News

இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட ஐஎம்எப்

0

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கான முக்கிய நடவடிக்கை
மொரோக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன் பொருளாதார ரீதியாக இலங்கைக்கான பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.