;
Athirady Tamil News

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

0

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விரக்தியின் காரணமாக
போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை தொடருந்து திணைக்களத்திடம் விசாரித்த போது, தொடருந்தின் சாரதியிடம் விசாரித்ததாகவும் “இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக தனக்கு தெரியாது” என சாரதி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.