;
Athirady Tamil News

சீனாவிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க

0

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(14) சீனாவிற்கு பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

சீனாவிற்கு முதலாவது விஜயம்
பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் அதிபரும் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் எனஅதிபர் அலுவலகம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் அதிபர் பக்கத்து நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும் கடந்த வருடம் பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.