;
Athirady Tamil News

ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை

0

தமிழ் கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹர்த்தால் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட விடயங்களை முன்வைத்தே இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கோரிக்கையை இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பனவே முன்வைத்துள்ளன.

தமிழ் அரசியல் கட்சிகள்
”வடக்கு,கிழக்கில் செயற்படுகின்ற மேற்படி தரப்புகளுடன் நாம் அடுத்துவரும் நாட்களில் ஆதரவினைக் கோரும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம் ” என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் ஹர்த்தாலுக்கான துண்டுப்பிரசுர விநியோகமும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.