;
Athirady Tamil News

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

0

முல்லைத்தீவில் நேற்று (14) சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.

நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியிலே குறித்த கைது இடம்பெற்றதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

760 லீற்றர் கசிப்பு
முல்லைத்தீவு காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விமானப்படைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதன்போது அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு மற்றும் சில பொருட்களைக் கைப்பற்றியதுடன் அப்பகுதியை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.