;
Athirady Tamil News

யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை

0

எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம்915) அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் யாழ்பாண மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச சந்தை வாய்ப்பு
“உள்ளூர் ஏற்றுமதி சந்தைகளை தாண்டி ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும்.

தற்போது, இந்தியாவுடனான கடல் மற்றும் வான் வழி தொடர்புகளை யாழ்.மாவட்டம் கொண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய சந்தை வாய்ப்புகளை எமது உற்பத்திகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

ஆகவே கடந்த காலங்களில் எமது விவசாயத்துறைக்கு மேற்கொண்ட உதவிகள் போன்று தற்போதைய இந்த வாய்ப்புகளை பயன்படுத்தவும் உதவிகளை செய்ய வேண்டும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளின் உருளைக்கிழங்கு அறுவடைகளில் அதிகப்படியான அடைவுமட்டம்(target achieve) 2019ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.

எனவே எமது விவசாயிகளுக்கு உள்ளூர் விதை உருளைக் கிழங்குகளை பெற்று வழங்குவதற்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும்.”என கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.