;
Athirady Tamil News

உயர் அதிகாரிகள் இருவர் திடீர் ராஜினாமா

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிவந்த தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் தமது பதவியை இராஜினாமா செய்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு பயணம்
இவ்வாறு இராஜினாமா செய்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக்வும் கூறப்படுகின்றது.

இதன்காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அண்மையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.