;
Athirady Tamil News

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0

யாழில் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட தாயார்
சம்பவத்தில் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறில் கணவரால் அப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.