;
Athirady Tamil News

மீண்டும் கியூ.ஆர் முறை சாத்தியமா..! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

0

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(16) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் உரிமம், கியூ.ஆர் முறைமைகளை சில சமூக ஊடகங்கள் மீண்டும் நடைமுறைபடுத்துவதாக செய்திகள் வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி
மேலும், அரசாங்கம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் Q.R. இந்த முறைமையை மீளக் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்று அரசாங்கம் ஊகித்துள்ளமை குறிப்பிடத்துக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.