;
Athirady Tamil News

கஞ்சாவை பயிரிடுவதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு

0

இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான பிரேரணை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றவுடன் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் கஞ்சாவும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு சபாநாயகரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

கஞ்சாவை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்த ஆயுர்வேதத் திணைக்களமும் அண்மையில் தனது ஒப்புதலை வழங்கியிருந்தது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றால், இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் கஞ்சா பெரிதும் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.