;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சையின் பின்னர் சமூக ஊடகங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நேற்றையதினம் (15.10.2023) நடைபெற்றிருந்தது.

பரீட்சை பெறுபேறுகள்
மேலும், 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.