;
Athirady Tamil News

இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரி தமிழர் பகுதியில் எழுந்த போராட்டம்

0

இஸ்ரேல் -பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று(16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த போராட்டம், அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகள்
இந்நிலையில், இஸ்ரேல் -பலஸ்தீன மோதல் காரணமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் நிலைமையினை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் போராட்டக்காரர்கள் பல்வேறுபட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பதாதைகளில் இஸ்ரேல் – பலஸ்தீன இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானம் வரவேண்டும், இனம், மதம், மொழி ஒற்றுமையினை சர்வதேச நாடுகள் உருவாக்கவேண்டும், இருதரப்பு அப்பாவி மக்களின் உயிர்களை மதிப்போம் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

மேலும் சர்வதேச நாடுகள் இரு நாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்குவதை தவிர்த்து போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.