;
Athirady Tamil News

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

0

வடக்கு கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியதாக போலி கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கட்சித் தலைவர்கள் மறுப்பு
இந்நிலையில் அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என தமிழ் கட்சி தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.