;
Athirady Tamil News

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

0

கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குழந்தை பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வருடம் குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்தது துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.