;
Athirady Tamil News

புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு

0

வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஏற்பாட்டுக்கு குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வீரவணக்க நிகழ்வு
“இறுதி யுத்தத்தின் போது, கொண்ட லட்சியம் குன்றிடாது, தானை தலைவன் வழி நின்று, களமாடி வீர காவியமான மாவீரர்களில், அடையாளப்படுத்தாமல் இருந்த 20 மாவீரர்களை, கடந்த காலங்கள் போல் இவ்வாண்டும் உறுதிப்படுத்தி அடையாளப்படுத்தியுள்ளோம். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.

சிறப்பாக இவ்வாண்டு சர்வதேச ரீதியாக எம் உறவுகள் செறிந்து வாழும் சுவிசர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு சம நேரத்தில் நடைபெறக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு எமது வீர மறவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் படி உங்களை கேட்டுக் கொள்கின்றோம்” என்றுள்ளது.

மேற்படி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து:

AULA SAAL

Zurcherstrasse 89

5432 Neuenhof

Switzerland

0041789650918

பிரான்ஸ்

Salle Jeanne d’arc

50 Rue de

Torcy 75018 Paris

France

0033768498388

அவுஸ்திரேலியா:

Brigade House

3, Junia Avenue

Toongabbie NSW 2148

Australia

0061470215595

பிரித்தானியா:

உலகத் தமிழர் வரலாற்று மையம்

Mill Lane, Banbury Oxford

OX17 3QP

United Kingdom

00447983337797

You might also like

Leave A Reply

Your email address will not be published.