;
Athirady Tamil News

பாதசாரி கடவையில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

0

தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பெண் நேற்று (23) மாலை 5.45 மணியளவில் தனது தாயின் இரத்த மாதிரி அறிக்கையுடன் பாதசாரி கடவையை கடந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இடம் பெற்ற விபத்து
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலிஸ் காவலில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் மோதிய பெண் சில மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டு இரும்பு வேலியில் மோதி நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.