;
Athirady Tamil News

முல்லைத்தீவில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

0

முல்லைதீவு- வவுனிக்குளதில், கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று(24.10.2023) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொழில் நடவடிக்கை
மேலும்,தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைவதாகவும் குமாரகுலசிங்கம் சங்கீதன் தெரிவித்துள்ளார்.

எனவே மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் கைப்பற்ற வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.