;
Athirady Tamil News

இறந்த மனைவி – விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

0

தனிமையில் வாழ்ந்து வந்த தந்தைக்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ளார்.

தாய் மறைவு
கேரளா, திருஏறங்காவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப்(62). கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுபொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது 2 மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் கொல்லத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், மனைவி திடீரென மாரடைப்பால் இறந்துள்ளார். இதனால் 1 வருடங்களை கடந்தும் தந்தை விரக்தியில் இருப்பதை கண்ட மகள் வேதனை அடைந்துள்ளார்.

தந்தைக்கு மறுமணம்
தொடர்ந்து, வெளிநாட்டில் வசித்து வரும் அவர், தனது தந்தைக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். மேலும், திருமண வரன் பார்க்கக்கூடிய இணைய தளங்களில் தேடியதில் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வாழ்ந்துவரும் மல்லிகா குமாரி (60) என்பவரை பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

அதன்பின் இருவீட்டாரும் பேசி திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இருவருக்கும் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்தது. இதில், உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.