;
Athirady Tamil News

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் – ஒன்பது பேர் கைது!

0

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி லண்டன் மற்றும் இங்கிலாந்து முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடிகுண்டுத் தாக்குதலை நிறுத்தக் கோரி, தலைநகரின் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகள் ஏந்தியவாறு ஒன்றாகக்கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி கடந்த 7 ஆம் திகதி தாக்குதலை தொடங்கினர்.

இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.

நேற்றைய 22-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

லண்டனில் ஆர்ப்பாட்டம்
கடந்த மூன்று வார இறுதிகளில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து சனிக்கிழமை “காசா, படுகொலையை நிறுத்து” மற்றும் “பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டவும்” போன்ற பலகைகளை ஏந்தியபடி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேரணியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஏழு பேர் பொது ஒழுங்கை மீறுவதாகக் கூறப்பட்டவர்கள், அவற்றில் பல வெறுப்புக் குற்றங்களாகக் கருதப்பட்டன, மேலும் இரண்டு அதிகாரிகள் மீது சந்தேகிக்கப்படும் தாக்குதல்கள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.