;
Athirady Tamil News

காஸாவில் பாதுகாப்பான இடம் இல்லை… தப்பிக்க வழியும் இல்லை: எச்சரிக்கை விடுக்கும் ஐ.நா

0

இஸ்ரேலின் கண்மூடித்தனத்தால் காஸாவில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.

வரலாற்றில் மிக மோசமான
சனிக்கிழமையன்று காஸா மீது இஸ்ரேல் இராணுவம் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மூன்று வாரங்களாக நடந்துவரும் போரில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கியதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் என்றால், பல ஆயிரக்கணக்கான மக்கள் மேலும் கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவே வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.

காஸாவில் பாதுகாப்பான இடம் என்பது எதுவும் இல்லை, அங்கிருந்து பதுகாப்பாக வெளியேற வழியும் இல்லை. காசாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்காக கவலை கொள்வது போன்று, அங்குள்ள சக ஊழியர்களுக்காகவும் நான் மிகவும் கவலைப்படுகிறேன் என வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள்
கடந்த 3 வாரங்களில் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள உக்கிர தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சாரிபாதி பேர்கள் சிறார்கள் என்றே கூறப்பௌகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை முதல் பாலஸ்தீனிய நிலப்பகுதி முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு முடக்கத்தையும் ஐ.நா உரிமைகள் தலைவர் கண்டித்துள்ளார்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல் உள்ளனர் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தப் பகைமைகள் முடிவடையும் போது, உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளையும் மட்டுமே எதிர்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.