;
Athirady Tamil News

சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன்: சரத் வீரசேகர புகழாரம்

0

அமெரிக்கா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சீனா தொடர்பில் சிறப்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் .

ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பர் என சீனாவை குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் அண்மையில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், ஆசிய நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை மேற்கத்திய உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவு
வர்த்தகம் மற்றும் முக்கியமாக பௌத்தம் மூலம் இந்த பிணைப்பு பரிணமித்து வளர்க்கப்படுகிறது. இந்தநிலையில், சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பராக இருந்து வருகிறது என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடான சீனா, மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

உலகின் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை இலங்கை தோற்கடித்தபோது, மேற்கத்திய நாடுகளால் இலங்கை இழிவுபடுத்தப்பட்டது. எனினும், சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அமெரிக்க நிகழ்ச்சித் திட்டத்திற்காக வீரசேகர விண்ணப்பித்த போதும், அவருக்கான வீசா மறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற துறைசார் குழுக்களில் வீரசேகர தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.