;
Athirady Tamil News

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் அவதி

0

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் (01.11.2023) “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அசௌகரியத்தில் நோயாளர்கள்
சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன காலை 7 மணி முதல் நண்பகல் 12 செயலிழந்து காணப்பட்டது .

எனினும் நண்பகலுக்கு பிறகு மருந்து விநியோகிக்கப்பட்டமையால் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.