;
Athirady Tamil News

திருமணமாகி 3 நாட்கள்; வீடு புகுந்த மர்ம நபர்கள் – இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!

0

காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வம் (24). ஐவரும் தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த கார்த்திகா (20) என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதில் கார்த்திகா வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 3 (அக்டோபர் 30) நாட்களுக்கு முன்னர் மாரிசெல்வம்-கார்த்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாரி செல்வத்தின் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக இருவரும், மாரி செல்வத்தின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

வெட்டி கொலை
இந்நிலையில் மாரிசெல்வம்-கார்த்திகா தம்பதியினர் நேற்று வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த 3 மர்ம நபர்கள் மாரிசெல்வம்- கார்த்திகா இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா, அல்லது வேறு யாரேனும் கொலை செய்து உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.