;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்,போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனொருவன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று(3)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த 16 வயதுடைய மாணவன், போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்த போது பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.