;
Athirady Tamil News

3ஆம் உலக போர் ஏற்பட கூடும் : டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை

0

நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3-ம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷ்ய அதிபர் புடின் பேசிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

நேரடியான போர்
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் போலந்து நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்த கூடும் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்.

போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளர கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க, முறையான பதிலடியை தருவதற்கு ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் தயாராக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.