;
Athirady Tamil News

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நான் நிச்சயம் வீதிக்கு இறங்குவேன்: பகிரங்க எச்சரிக்கை விடும் எம்.பி

0

தற்போதைய அரசாங்கம் முறையாக செயற்படவில்லையென்றால் நான் நிச்சயம் வீதியில் இறங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று மிக அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பதவி முக்கியம் அல்ல
தற்போதைய அரசாங்கம் முறையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டிய தயாசிறி ஜெயசேகர எதிரணிகள் ஒன்றிணைந்து பொதுத்திட்டமொன்றை உருவாக்காவிட்டால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது. நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் இனியும் முடியாது. அதனால்தான் பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கு ஒன்றுபட வேண்டும்.

எனக்கு பதவி முக்கியம் அல்ல. இதற்காக என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.