;
Athirady Tamil News

இலங்கையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

0

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிர் பிழைத்தவர் உடுகம்பொல, கெஹல்பத்ததர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீதிகளை சாலைகளை பயன்படுத்துமாறு கம்பஹா பிரதான பொலிஸ் பரிசோதகர் மோகன் சில்வா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.