;
Athirady Tamil News

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் விடுத்துள்ள அறிவித்தல்

0

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், இந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க மேலும் அறியத்தருகையில்,

நிரந்தர வெளியேற்றம்
“அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்.

ஏனைய 1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் வசதிகள் இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது.” என்றார்.

தொழிற்சங்க நடவடிக்கை
அத்துடன், பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று(03) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.