;
Athirady Tamil News

இலங்கையில் கண்டி பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

0

கண்டி – மஹியங்கனை – ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.