;
Athirady Tamil News

கட்சியில் இருந்து தூக்கியெறிப்பட்ட அலிசப்ரி ரஹீம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க, அவரது பதவி விலகல் குறித்த கடிதம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவுக்கும், அலிசப்ரி ரஹீமுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடிதத்தைப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லா, இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.