;
Athirady Tamil News

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு கடும் நடவடிக்கை

0

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக எஸ்.என்.எம். சாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களினால் 04 இலட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சுட்டிகாட்டியுள்ளார்.

நீதிமன்றங்களில் வழக்குதாக்கல்
அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை,தெஹியத்தக்கண்டி ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 111 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளனர்.

இதில் 77 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவ் வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 04 இலட்சத்தி 30 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய வர்த்தகர்களுக்கு நீதி மன்றிங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.