;
Athirady Tamil News

வீடொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

0

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம், அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.