;
Athirady Tamil News

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

0

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமரும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

31.12.2015 க்கு முன்னர் மற்றும் 01.01.2016 முதல் 01.01.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்திற்காக வருடாந்தம் 67,608 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதி ஒதுக்கீடு
மேலும் அவர் கூறுகையில், அரச நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இன் விதிகளின்படி, இரண்டு சந்தர்ப்பங்களின் போது ஓய்வூதியங்களை திருத்துவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் நிதி மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டமையால், போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.

அத்தோடு, “போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் ஏற்பட்ட தாமதமே ஓய்வூதியம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டமைக்கு காரணம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.