;
Athirady Tamil News

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

0

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

யேமன் கடற்கரையில் ஹவுத்தி படைகளால் MQ9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஹவுத்தியின் இராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

இஸ்ரேல் : ஹமாஸ் மோதல்
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் காசா பகுதியில் ஹமாஸுடன் போரிட்டு வருவதால், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகளுக்கு வோஷிங்டன் எச்சரிக்கையாக இருப்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹவுத்திகளால் ஏவப்பட்ட குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து அழித்தது.

மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்
இஸ்ரேல்-காசா போரைச் சுற்றியுள்ள பிராந்திய பதட்டங்களை அடுத்து, விமானம் தாங்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு நகர்த்தியுள்ளது.

யேமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ள செங்கடலில் இராணுவக் கப்பல்களில் துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் இதில் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.