;
Athirady Tamil News

தினமும் வரேன்.. சாமி எதுவுமே செய்யல.. கடுப்பில் கடவுளுக்கே குண்டு போட்ட நபர் – பரபரப்பு!

0

ஒருவர் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் குண்டு
சென்னை, பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோவில் வாசலில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. பதறிப்போன பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோவிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர், பின்னர், தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

விரக்தி
இந்நிலையில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, கோவிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. மேலும், அவர் கோவில் அருகே கடை நடத்தி வரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, “கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வருகிறேன்.

ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்” என்று கூறியுள்ளார். மேலும், அந்த சம்பவத்தன்று அவர் போதையில் இருந்ததாக தெரியவந்தது, அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.