;
Athirady Tamil News

அதிபரின் தீபாவளி வாழ்த்து செய்தி

0

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள, தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது வாழ்த்து செய்தியில்,

சுபீட்சம்
“நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

அத்துடன், நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.” என வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.