;
Athirady Tamil News

யாழில் பெரும் துயரம்: பரிதாபமாக உயிரிழந்த கிராம சேவகர்!

0

யாழ்ப்பாண பகுதியில் மூளைக் காய்ச்சல் காரணமாக கிராம சேவகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது, யாழ். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் (14-11-2023) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளைக் காய்ச்சலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.