;
Athirady Tamil News

தாமரைக்கோபுரத்தில் மற்றுமொரு சாகச நிகழ்வு!

0

தெற்காசியாவிலுள்ள மிக உயரமான கோபுரமாக விளங்கும் கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரத்தில் விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) நிகழ்வு இன்று (18) இடம்பெறுகின்றது.

இன்றைய தினம் (18) இடம்பெற்ற்றுக்கொண்டிருக்கும் இந்த சாகச விளையாட்டு நிகழ்வானது இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக தாமரைக்கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

29 ஆவது மாடியிலிருந்து
இந்த சாகச நிகழ்வில் தாமரைக்கோபுரத்தின் 29 ஆவது மாடியிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து கோபுர வளாகத்தின் நிலத்தை அடைவதாக இது இடம்பெறுகின்றது.

ஆறு பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில், முதலாவதாக குதித்த நபர் கோபுர வளாகத்தில் நிலத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வைக்காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.