;
Athirady Tamil News

சிறிலங்காவில் நடைமுறைக்கு வந்த 4 சட்டமூலங்கள்

0

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை சட்டமூலம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் ( சட்டமூலம் என்பவற்றின் திருத்த சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார்.

நேற்று முதல் நடைமுறைக்கு
அதற்கமைய,

2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம்,

2023 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டம்,

2023 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டம்,

மற்றும் 2023 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் என்பன நேற்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.