;
Athirady Tamil News

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் யாழ் வருகையினை நிறுத்திய குக்ஷ்பு

0

எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக தென்னிந்திய நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறியிருந்தார்.

இந் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குக்ஷ்புவுக்கு பதில் டிடி
விடுதலைப் புலிகள் தொடர்பில் நடிகை குஷ்புவின் சர்ச்சை கருத்துக்கு வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறிவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை நடிகை குஷ்புவிற்கு பதிலாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.