;
Athirady Tamil News

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் அதிரடி கைது!

0

தாய்லாந்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரே பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் நேற்றைய தினம் (18-11-2023) மாலை 04.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு-08, பொரளை பிரதேசத்தில் வசித்து வந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.