;
Athirady Tamil News

அதிகாலையில் திடீரென சரிந்து விழுந்த மரம்! சேதம் குறித்து வெளியான தகவல்

0

கிளிநொச்சி நகரத்தில் பாரிய வேப்பமரம் ஒன்று விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.

இன்று(20-11-2023) அதிகாலை ஒரு மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சேதம்
ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரம் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் விழுந்துள்ளது.

இதன்போது கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் காயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.