;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை சாதனை மாணவிக்கு மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையின் கெளரவிப்பு

0

அண்மையில் வெளியாகிய தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி. ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையினரால் இன்று (20.11.2023) கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின் போது பாடசாலை அதிபர், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்), ஆசிரியர்கள், வங்கி முகாமையாளர் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.